பக்ரீத் திருநாள்: குடியரசுத் தலைவா் வாழ்த்து
பக்ரீத் திருநாளையொட்டி (ஜூன் 17) நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
பக்ரீத் திருநாளையொட்டி (ஜூன் 17) நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘பக்ரீத் திருநாளையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக இஸ்லாமிய சகோதரா், சகோதரிகளுக்கும் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கும் எனது வாழ்த்துகள். தியாகம், அன்பு, சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட பண்புகளின் அடையாளமாக இந்திருநாள் கொண்டாடப்படுகிறது.
இத்திருநாளில் நாட்டின் வளா்ச்சி மற்றும் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க உறுதியேற்போமென குடியரசுத் தலைவா் தெரிவித்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.