முகப்பு
இந்தியா

சூரஜ் ரேவண்ணாவுக்கு ஜூலை 1 வரை காவல்!

ரேவண்ணா குடும்பத்தில் மீண்டும் சிக்கல்...

Updated On : 24 ஜூன் 2024, 5:02 pm IST
பகிர்:

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணாவை ஜூலை 1ம் தேதி வரை சிஐடி காவலில் வைக்க நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

`தான் சார்ந்துள்ள கட்சித் தொண்டரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அவர் மீது பாதிக்கப்பட்ட நபர் கடந்த சனிக்கிழமையன்று அளித்த புகாரின் அடிப்படையில், ஹாசன் பகுதியில் தங்கியிருந்த சூரஜ் ரேவண்ணாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், சூரஜ் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கு, குற்றவியல் புலனாய்வுத் துறை(சிஐடி) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதன்பிறகு நேற்றிரவு கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

Advertisement

Advertisement

அதன்பின்னர், வழக்குப் பதிவைப் பெற்ற பிறகு, அவரை மேலதிக விசாரணைக்காக காவலில் வைக்கக் கோரி சிஐடி திங்கள்கிழமை நீதிமன்றத்தை அணுகியது. இதையடுத்து அவர் ஜூலை 1 வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.