FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் எண்ணிக்கை வங்கதேசத்தை விட அதிகம்: ராகுல் குற்றச்சாட்டு

இந்தியாவில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

Updated On : 3 மார்ச் 2024, 2:09 pm IST
மத்தியப்பிரதேசத்தில் ராகுல் காந்தியின் நடைபயணம் - படம் | ஏஎன்ஐ
பகிர்:

வங்கதேசம் மற்றும் பூடானுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியின் ’இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ நேற்று(மார்ச்.2) மத்தியப் பிரதேசத்தில் நுழைந்தது. மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் ராகுலின் நடைபயணத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் உச்சகட்டவேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இரட்டிப்பாக உள்ளது.

Advertisement

Advertisement

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதன் மூலம் சிறு வணிகங்களுக்கு நரேந்திர மோடி முடிவுரை கட்டிவிட்டார். மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளான பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) ஆகியவை, நாட்டில் அதிக இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் சிறு, குறு மற்றும் நடுத்தர துறைக்கு பெரிய அடி விழுந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.22 சதவீதமாக இருந்தது, இது அண்டை நாடுகளான பாகிஸ்தான் (11.3 சதவீதம்) மற்றும் வங்கதேசம் (12.9 சதவீதம்) ஆகிய நாடுகளில் நிலவும் வேலைவாய்ப்பின்மை நிலவரத்தை விட அதிகம் என்று உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுவதையும் குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments