ஐஸ்கிரீம் வணிகத்தை கைவிடும் யூனிலிவர்! 75,000 பேர் வேலையிழக்கும் அபாயம்!!
செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையிலும் யூனிலிவர் ஈடுபடவுள்ளது.
யூனிலிவர் நிறுவனம் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனையை கைவிட முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக 75 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு யூனிலிவர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உணவு மற்றும் பானங்கள், சுத்திகரிப்புப் பொருட்கள், அழகுப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
மாக்னம் மற்றும் மென் & ஜெர்ரி பெயர்கள் மூலம் ஐஸ்கிரீம்கள் உற்பத்தியிலும் யூனிலிவர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே இந்த இரு நிறுவனங்களையும் தனி நிறுவனங்களாக மேம்படுத்தும் வகையில் யூனிலிவர் நிறுவனம் தனது குழுவிலிருந்து கைவிடவுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், இதன் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையிலும் யூனிலிவர் ஈடுபடவுள்ளது. இதன் விளைவாக உலகம் முழுவதும் இந்நிறுவனத்தில் பணிபுரியும் 75 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படவுள்ளது.
இது தொடர்பாக பேசிய யூனிலிவர் நிறுவனத்தின் தலைவர் இயான் மேகின்ஸ், ஐஸ்கிரீம் நிறுவனத்தின் விலகல் மற்றும் அதன் உற்பத்தித் திட்டம் யூனிலிவரின் தனித்திறனை அதிகரித்து அதிக கவனம் செலுத்தும் சூழலை மேம்படுத்தும். எதிர்காலத்தில் உலக அளவிலான தனித்த நிறுவனமாகவும், நிலைத்த வளர்ச்சியையும் உருவாக்க இந்த முடிவு உதவும் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.