இந்தியா

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

இன்று அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள் என்று வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டியளித்தார்.

DIN

மக்களவைத் தோ்தலில் 4-ஆம் கட்டமாக ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று (மே 13) வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தங்களது வாக்கினை செலுத்தினார்கள்.

நடிகர் அல்லு அர்ஜுன் வாக்களித்த பின் செய்தியாளர்களுடன் பேசினார். அவர் பேசும் போது, "தயவுசெய்து வாக்களிக்கவும். வாக்களிப்பது நாட்டின் அனைத்து குடிமக்களின் பொறுப்பு. நம் வாழ்கையின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான மிக முக்கியமான நாள் இன்று. அதிக அளவிளான வாக்காளர்கள் வாக்களிக்க வருவதால், மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ளது.

நான் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் இணையவில்லை, அனைத்து கட்சிகளிடமும் நடுநிலையாக இருக்கிறேன்." என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு!

திமுகவில் ஓபிஎஸ்! இன்று இணைகிறார்?

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT