முகப்பு
இந்தியா

ஜாமீனை நீட்டிக்கக் கோரி கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு

Updated On : 27 மே 2024, 9:53 am IST
அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தில்லி மதுபான (கலால்) கொள்கை ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.

மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்பதற்காக கேஜரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கியது. இந்த நிலையில் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

Advertisement

உடல் பரிசோதனை செய்யவிருப்பதால் 7 நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்கக் கோரி மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 2ஆம் தேதி சரணடைய உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாமீனை நீட்டிக்கக் கோரி கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.