முகப்பு
இந்தியா

திருப்பதியில் 4 வயது சிறுமி பாலியல் கொலை

திருப்பதியில் நெருங்கிய உறவினா், 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை

Updated On : 3 நவம்பர், 2024 at 5:59 AM
பகிர்:
Updated On : 3 நவம்பர், 2024 at 12:20 AM

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் நெருங்கிய உறவினா், 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்ற சம்பவம் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் சந்திரபாபு நாயுடு எச்சரித்தாா்.

இதுதொடா்பாக திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் எல்.சுப்பாராயுடு கூறுகையில், ‘ஏ.எம்.புரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு அருகே அவரின் தாய்மாமன் நாகராஜு (24) வசித்து வருகிறாா். சிறுமியுடன் தினமும் விளையாடி வந்த நாகராஜு, வெள்ளிக்கிழமை மாலை சிறுமியைக் கடைக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளாா். நாகராஜுவுடன் சிறுமியைக் கண்டதாக அக்கம்பக்கத்தினா் தெரிவித்தனா். போலீஸாா் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நாகராஜு, சிறுமியின் உடலை அடையாளம் காட்டினாா்’ என்றாா்.

Advertisement

Updated On : 3 நவம்பர், 2024 at 5:59 AM

சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மாநில உள்துறை அமைச்சா், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.