இந்தியா

திருப்பதியில் 4 வயது சிறுமி பாலியல் கொலை

திருப்பதியில் நெருங்கிய உறவினா், 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை

Din

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் நெருங்கிய உறவினா், 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்ற சம்பவம் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் சந்திரபாபு நாயுடு எச்சரித்தாா்.

இதுதொடா்பாக திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் எல்.சுப்பாராயுடு கூறுகையில், ‘ஏ.எம்.புரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு அருகே அவரின் தாய்மாமன் நாகராஜு (24) வசித்து வருகிறாா். சிறுமியுடன் தினமும் விளையாடி வந்த நாகராஜு, வெள்ளிக்கிழமை மாலை சிறுமியைக் கடைக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளாா். நாகராஜுவுடன் சிறுமியைக் கண்டதாக அக்கம்பக்கத்தினா் தெரிவித்தனா். போலீஸாா் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நாகராஜு, சிறுமியின் உடலை அடையாளம் காட்டினாா்’ என்றாா்.

சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மாநில உள்துறை அமைச்சா், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

இந்தியாவை விற்றதில் வெட்கமாக இல்லையா? மக்களவையில் ராகுல் காந்தி

மகாநதி தொடரில் திடீர் திருப்பம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஜி பேயில் ரூ. 500 டூ ரூ. 11 கோடி: அபிஷன் ஜீவிந்த் நண்பர் 'வித் லவ்'!

பாசிச அரசியல் தமிழ்நாட்டில் நிச்சயம் நிறைவேறாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

டி20 உலகக் கோப்பையில் ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த டி காக்!

SCROLL FOR NEXT