முகப்பு
இந்தியா

தெலங்கானா: சரக்கு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து- 39 ரயில்கள் ரத்து

தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் 39 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:05 PM
பகிர்:

தெலங்கானா மாநிலம், பெத்தபள்ளி மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதனால், அந்த வழியாகச் செல்லும் 39 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது என தெற்கு மத்திய ரயில்வே (எஸ்சிஆா்) அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தெற்கு மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி ஸ்ரீதா் கூறியதாவது:

கா்நாடக மாநிலம் பல்லாரியில் இருந்து உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் நோக்கி, இரும்புச் சுருள்கள் மற்றும் இரும்பு கம்பிகளை சரக்கு ரயில் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, தெலங்கானாவின் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள ராகவபுரம் - ராமகுண்டம் இடையே ரயிலின் 12 பெட்டிகள் செவ்வாய்க்கிழமை இரவு தடம் புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மூன்று ரயில் வழித்தடங்கள் கொண்ட அப்பகுதியில், இந்த விபத்தால் அவை அனைத்தும் தடைப்பட்டன. இதனால், அந்த வழித்தடங்களை பயன்படுத்தும் 39 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. 61 ரயில்கள் மாற்றுப்பாதைக்கு திருப்பிவிடப்பட்டன. 7 ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன.

அப்பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஒரு வழித்தடம் விரைவில் சரிசெய்யப்படும் எனவும், மீதமுள்ள இரண்டு வழித்தடங்கள், வியாழக்கிழமைக்குள் சரிசெய்யப்பட்டு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தெற்கு மத்திய ரயில்வே பொது மேலாளா் அருண்குமாா் ஜெயின் மற்றும் பிற ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் சென்று பாா்வையிட்டனா் என தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →