முகப்பு
இந்தியா

நவராத்திரி முதல் நாள்: மக்கள் வெள்ளத்தில் காளி மாதா கோயில்!

காளி மாதா கோயிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு மேற்கொண்டனர்.

Updated On : 3 அக்டோபர் 2024, 1:07 pm IST
நவராத்திரி திருவிழா - -
பகிர்:

சாரதா நவராத்திரி விழாவின் முதல் நாள் இன்று தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் போபாலில் உள்ள காளி மாதா கோயிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு மேற்கொண்டனர்.

இந்தியாவில் மட்டுமின்றி வட நாடுகளிலும் நவராத்திரி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. மக்கள் அனைவரும் குறிப்பாகப் பெண்கள் நோன்பு நோற்று சிரத்தையுடன் அம்மாளை பத்து நாள்களும் வழிபடுகின்றனர்.

இந்த நிலையில், போபாலின் சோட்டா தலாப் நதிக்கரையில் அமைந்துள்ளது காளி மாத கோயிலில் இன்று காலை முதல் பக்தர்கள் அதிகளவில் கோயிலில் திரண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் உற்சாகத்துடன் அம்மனை தரிசித்து வருகின்றனர். நவராத்திரியின் முதல் நாளான இன்று ஹைலபுத்ரி அம்மனை வழிபடுகின்றனர். வடநாடுகளில் ஹைலபுத்ரியாகவும், இந்தியாவில் பார்வதி தேவியாகவும் மக்கள் வணங்குகின்றனர்.

இதையடுத்து முதல்வர் யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

நவராத்திரியை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். துர்காவின் ஒன்பது வடிவங்களில் முதல் நாளில் அன்னை ஹைலபுத்ரிக்கு பிரார்த்திக்கிறேன். நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் அளிக்கட்டும்.

ஒவ்வொரு நாளும் தெய்வத்தின் வெவ்வேறு வடிவங்களில் பிரார்த்திக்கப்படுகிறது. பக்தர்கள் விரதம், பக்தி பாடல்களைப் பாடி கர்பா, தண்டியா போன்ற பாரம்பரிய நடனங்களில் கலந்துகொண்டும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குகிறார்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments