அக்.10ல் லாவோஸ் நாட்டுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடிக்கு லாவோஸ் நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோடி அக். 10, 11 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லாவோஸ் நாட்டில் 21வது ஆசிய-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெறுகிறது. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு லாவோஸ் நாட்டின் பிரதமர் சோனேக்சே சிபாண்டோன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: 'மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்' - இல்திஜா முஃப்தி
இந்த அழைப்பை ஏற்று இரண்டு உச்சி மாநாடுகளிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு இருதரப்பு சந்திப்புகளை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து லாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.