பிரதமர் மோடி 
இந்தியா

அக்.10ல் லாவோஸ் நாட்டுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடிக்கு லாவோஸ் நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிடிஐ

தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோடி அக். 10, 11 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லாவோஸ் நாட்டில் 21வது ஆசிய-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெறுகிறது. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு லாவோஸ் நாட்டின் பிரதமர் சோனேக்சே சிபாண்டோன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று இரண்டு உச்சி மாநாடுகளிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு இருதரப்பு சந்திப்புகளை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து லாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையுடன் முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீன அதிபர் விருப்பம்!

கணவரின் அன்பால் மீண்டு வந்தேன்: ஸ்ருதிகா பகிர்ந்த விடியோ!

விசிலடித்த ரசிகரைக் கண்டித்த அஜித்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்! தடை செய்ய வலியுறுத்தல்

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது: பிரேன் சிங்

SCROLL FOR NEXT