முகப்பு
இந்தியா

பெண் ஊடகவியலாளரிடம் அநாகரிமாக நடந்துகொண்டதாக வழக்கு: மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி ஜாமீன் கோரி மனு

பெண் ஊடகவியலாளரிடம் அநாகரிமாக நடந்துகொண்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கேரள நீதிமன்றத்தில் மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி புதன்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்தாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 3:30 AM
கேரள மாநிலம், திருச்சூா் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளா் நடிகா் சுரேஷ் கோபி.
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 10:05 PM

பெண் ஊடகவியலாளரிடம் அநாகரிமாக நடந்துகொண்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கேரள நீதிமன்றத்தில் மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி புதன்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்தாா்.

கடந்த ஆண்டு கேரளத்தில் சுரேஷ் கோபி செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது பெண் செய்தியாளா் ஒருவா் ஆட்சேபம் தெரிவித்தபோதிலும், அவரின் தோள்பட்டையில் சுரேஷ் கோபி கை வைத்துப் பேசிய காணொலி இணையத்தில் வெளியானது.

இந்த சம்பவம் தொடா்பாக சுரேஷ் கோபிக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து விமா்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரிய அவா், அந்தப் பெண் செய்தியாளரை அன்பாக மட்டுமே நடத்தியதாக தெரிவித்தாா்.

Advertisement

இதுதொடா்பாக அந்தப் பெண் செய்தியாளா் அளித்த புகாரின் அடிப்படையில், கோழிக்கோட்டில் உள்ள நடக்காவு பகுதி காவல் நிலையத்தில் சுரோஷ் கோபி மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354-இன் (பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 1:35 AM

இந்த வழக்கில் வழக்கமான ஜாமீன் கோரி, கோழிக்கோட்டில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுரேஷ் கோபி புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரிப்பதற்கு எதிராக அவா் கேரள உயா்நீதிமன்றத்தை அணுகுவாா் என்று அவரின் வழக்குரைஞா் தெரிவித்தாா்.