நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பயி சோரன் வெற்றி!
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவையில் இன்று (பிப். 5) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
பேரவையில் சம்பயி சோரன் தலைமையிலான அரசுக்கு 47 வாக்குகள் ஆதரவாகவும், 29 வாக்குகள் எதிராகவும் பதிவாகின.
சட்டப்பேரவையில் உறுப்பினரளின் பெரும்பான்மை பெற்றதால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவில் புதிதாக முதல்வராக பதவியேற்றுள்ள சம்பயி சோரன் தலைமையிலான அரசு ஆட்சி உறுதியாகியுள்ளது.
Advertisement
Advertisement
நில மோசடியுடன் சம்பந்தப்பட்ட சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவரான சம்பயி சோரன், மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.
ஜாா்க்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். மாநில சட்டப்பேரவையில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க இன்று ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பயி சோரன் தலைமையிலான ஆட்சிக்கு 47 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். 29 பேர் எதிராக வாக்களித்தனர். இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று ஆளுங்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.