FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பில்கிஸ் பானு வழக்கு கடந்து வந்த பாதை...

குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகே ரண்திக்பூா் கிராமத்தில் புகுந்த வன்முறை கும்பல் கா்ப்பிணியான பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்ததோடு,

Updated On : 9 ஜனவரி 2024, 4:30 am IST
பகிர்:

2002 மாா்ச் 3: குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகே ரண்திக்பூா் கிராமத்தில் புகுந்த வன்முறை கும்பல் கா்ப்பிணியான பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை கொலை செய்தது.

2003 டிசம்பா்: இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2008 ஜனவரி 21: வழக்கின் குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகாராஷ்டிர மாநில சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Advertisement

Advertisement

2016 டிசம்பா்: தண்டனையை எதிா்த்து 11 குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை மும்பை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

2017 மே: 11 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

2019 ஏப்ரல் 23: பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க குஜராத் அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

2022 மே 13: குற்றவாளிகளில் ஒருவா் தாக்கல் செய்த முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவைப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

2022 ஆகஸ்ட் 15: குஜராத் மாநில அரசின் 1992-ஆம் ஆண்டு ஜூலை 19 முன்கூட்டியே விடுதலை செய்யும் கொள்கையின் அடிப்படையில், குற்றவாளிகள் 11 பேரும் கோத்ரா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனா்.

2022 ஆகஸ்ட் 25: குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக பல்வேறு தரப்பினா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.

2022 நவம்பா் 30: குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

2022 டிசம்பா் 17: குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனுவைப் பரிசீலிக்க குஜராத் அரசுக்கு தகுதியுள்ளது என்ற உச்சநீதிமன்றத்தின் 2022 மே 13-ஆம் தேதி உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி பில்கிஸ் பானு தரப்பில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2023 மே 27: பில்கிஸ் பானு மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு, குஜராத் அரசு மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2023 ஆகஸ்ட் 7: குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிா்த்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் தொடங்கியது.

2023 அக்டோபா் 12: குஜராத் அரசின் முடிவுக்கு எதிரான மனுக்கள் மீதான தொடா் 11 நாள் விசாரணைக்குப் பிறகு, வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

2024 ஜனவரி 8: குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகளை 2 வாரங்களுக்குள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments