வாட்ஸ்ஆப்பில் பரவும் தேர்தல் தேதி போலியானது: தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தல் தேதி குறித்து இணையத்தில் பரவும் செய்திகள் போலியானவை என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 8:41 PM
மக்களவைத் தேர்தல் தேதி குறித்து இணையத்தில் பரவும் செய்திகள் போலியானவை என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளை விரைவு படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஒரு வாரமாக ஏப்ரல் 16-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன.
Advertisement
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் பரவும் செய்தி போலியானது என்றும், தேர்தல் அட்டவணையை செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் தேர்தல் ஆணையமே அறிவிக்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.