அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு 8 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!
8 புதிய நீதிபதிகளை நியமிக்கும் முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்..
அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் 8 புதிய நீதிபதிகளை நியமிக்கும் முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் ஏப்ரல் 2ல் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதைத் தொடர்ந்து அந்த கூட்டத்தில் அலகாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக அதிகாரிகளை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜிதேந்திர குமார் சின்ஹா, அப்துல் ஷாஹித், அனில் குமார் எக்ஸ், தேஜ் பிரதாப் திவாரி, சந்தீப் ஜெயின், அவ்னிஷ் சக்சேனா, மதன் பால் சிங் மற்றும் ஹர்வீர் சிங் ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.