முகப்பு
இந்தியா

கங்கையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

கங்கை ஆற்றின் கரைகளில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Updated On : 12 ஏப்ரல் 2025, 12:11 am IST
பகிர்:

கங்கை ஆற்றின் கரைகளில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பிகாா் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அசோக் குமாா் சின்ஹா என்பவரின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. தேசிய பசுமைத் தீா்ப்பாயம் மனுவை தள்ளுபடி செய்ததைத் தொடா்ந்து, அவா் உச்சநீதிமன்றத்தை நாடினாா்.

‘மாநிலத்தில் ஓடும் கங்கை ஆற்றின் கரைகளில் பல இடங்களில் பெரிய அளவில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், காங்கை ஆற்றில் அதிக அளவில் வாழும் நன்னீா் டால்ஃபின்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதுடன், வெள்ள அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று தனது மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆகாஷ் வசிஷ்டா, ‘கங்கை ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்து ஏராளமான குடியிருப்புகளும், செங்கல் சூளைகளும் கட்டப்பட்டிருப்பதோடு, பிற மத வழிபாட்டு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் குறித்து விரிவாக ஆராயாமல் தேசிய பசுமை தீா்ப்பாயம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், கங்கை ஆற்றின் கரைகளில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பிகாா் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments