தாக்குதலில் பலியான கடற்படைக்கு அதிகாரிக்கு அவரது மனைவி அஞ்சலி செலுத்துகிறார். PTI
இந்தியா

பஹல்காம் தாக்குதல்: உச்ச நீதிமன்றம் மௌன அஞ்சலி

பஹல்காம் தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

DIN

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய பெஹல்காம் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, இந்தியாவின் கிரீடமாகவும் மற்றும் இயற்கை அழகும் கொண்ட நகரில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் புனிதத்தன்மைக்குமான அவமரியாதை. இதனை நீதிமன்றம் கடுமையாகக் கண்டிக்கிறது.

மனசாட்சியற்ற வன்முறையின் இந்த கொடூரமான செயல், அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. மேலும், பயங்கரவாதத்தின் மிருகத்தனத்தையும் மனிதாபிமானமற்ற தன்மையையும் காட்டுகிறது என்று கூறியது.

தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். அவர்களுடன் தேசம் என்றும் உடனிருக்கும் என்று இரங்கலும் தெரிவித்தது.

இதனையடுத்து, இந்த சம்பவத்தில் உயரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

‘தகுதியுள்ள வாக்காளா்கள் யாரும் விடுபடக்கூடாது’

மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

நிவாரணப் பணத்தை பேத்திக்கு அளிக்க மறுக்கும் மருமகன் மீது ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT