நவி மும்பையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !
நவி மும்பையில் உள்ள நடனப் பாரை தாக்கியதோடு அதன் வளாகத்தை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தொண்டர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
நவி மும்பையில் உள்ள நடனப் பாரை தாக்கியதோடு அதன் வளாகத்தை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தொண்டர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், பன்வேலின் புறநகரில் உள்ள நைட் ரைடர்ஸ் பாரில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தொண்டர்கள் குழு சனிக்கிழ்மை இரவு நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியோடு மது பாட்டில்களையும் உடைத்துள்ளனர். இந்த தாக்குதலின் விடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.
அதில் உடைந்த மேசைகள், உடைந்த கண்ணாடிகள் மற்றும் நிறுவனத்தின் உட்புறங்கள் சூறையாடப்பட்டிருந்தன. "சத்ரபதி சிவாஜி மகாராஜின் புனித பூமியில் நடன பார்களுக்கு இடமில்லை. பன்வேலியிலோ அல்லது மாநிலத்தில் வேறு எங்கும் இதுபோன்ற ஆபாசங்கள் செழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று நவநிர்மாண் சேனை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்
பன்வேல் போலீஸார் இந்த சம்பவத்தை அறிந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். "நாங்கள் சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்று வருகிறோம். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல" என்று அந்த அதிகாரி செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.
Activists of the Maharashtra Navnirman Sena (MNS) launched an attack at a dance bar in Navi Mumbai and vandalised the premises, police said on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.