இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பாஜகவுடன் இல்லை! -பிரசாந்த் கிஷோர்
இது நடந்தால், நாம் பாஜகவை மோசமாக தோற்கடிக்கலாம்... -பிரசாந்த் கிஷோர் சூசகம்!
இந்தியாவில் உள்ள மொத்த ஹிந்துக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாஜகவுடன் இல்லை என்று ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.
பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று(ஆக. 16) பிரசாந்த் கிஷோர் பேசியதாவது: "தத்துவ ரீதியிலான கோட்பாட்டில் மட்டுமே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இந்த நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பாஜகவுடன் இல்லை. அவர்கள், கொள்கை ரீதியாக பாஜக பக்கம் இல்லை.
ஜன் சுராஜ் கட்சியின் அரசியல் ஃபார்முலா இதுதான்;
Advertisement
Advertisement
‘காந்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், பாபாசாகேப் அம்பேத்கர், ராம் மனோகர் லோஹியா ஆகியோரின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து ஹிந்துக்களும் முஸ்லிம்களுடன் சமூக-அரசியல் கூட்டணியை அமைக்க வேண்டும்.
இது நடந்தால், நாம் பாஜகவை மோசமாக தோற்கடிக்கலாம்” என்றார்.
Jan Suraaj founder Prashant Kishor says, More than half of the Hindus in this country are not with the BJP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.