முகப்பு
இந்தியா

கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்: தேர் மீது மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி!

தேர் மீது மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக...

Updated On : 18 ஆகஸ்ட் 2025, 12:28 pm IST
பலியானவர்கள்.
பகிர்:

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தெலங்கானா மாநிலம் ராமந்தபூரில் உப்பல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர்.

பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தபோது, தேர் மீது மின்கம்பி மீது உரசி விபத்து ஏற்பட்டது. இதில் கிருஷ்ணா(21), சுரேஷ்(34), ஸ்ரீகாந்த்(35), ருத்ரவிகாஸ்(39), ராஜேந்திரன்45) ஆகியோர் பலியாகினர்.

தேரோட்டம் நிறைவடைந்து, தேரை நிறுத்த முயற்சி செய்த போது, மின்கம்பியானது தேர் மீது உரசி விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

காயமடைந்த 4 பேரும் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

During the Krishna procession, a chariot collided with an electric wire and caused an accident. Five people were killed and four were injured in the accident.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments