சாவர்க்கரின் கவிதை விழா! அமித் ஷா அந்தமான் பயணம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்தமான் செல்வது குறித்து...
சாவர்க்கரின் கவிதை விழாவில் கலந்துகொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விநாயக் தாமோதர் சாவர்க்கர் எழுதிய பிரபல ‘சாகர பிரான் தலமாலா’ எனும் கவிதையின் 116 ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டி நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், வரும் டிச.11 ஆம் தேதி அமைச்சர் அமித் ஷா அந்தமானுக்கு வருகை தருவதாகவும், டிச.12 ஆம் தேதி பியோத்னாபாதில் சாவர்க்கரின் சிலையைத் திறந்து வைக்கவுள்ளதாகவும், அந்தமான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ விஜயபுரத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழிநுட்ப நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாவர்க்கர் குறித்த பாடல் ஒன்றையும் வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது பயணத்திட்டம் குறித்த இறுதி அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, அந்தமான் தீவில் உள்ள காலா பானி சிறைச்சாலையில் கடந்த 1911 ஆம் ஆண்டு விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களால் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இந்தியா கூட்டணி சமர்ப்பிப்பு!
It has been reported that Union Home Minister is planning to visit the Andaman and Nicobar Islands to commemorate the 116th anniversary of Savarkar's iconic poem ‘Sagara Pran Talamala'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.