தொடர்ந்து 3 ஆவது நாளாக...! ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து...
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு, 3 ஆவது நாளாக இன்றும் (டிச. 10) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, உடனடியாக நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையினர் நீதிமன்ற வளாகத்தில் 2 கட்டங்களாகச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நீதிமன்றக் கட்டடம், வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சோதனகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சோதனைகளின் முடிவில், சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததால், இந்த மிரட்டல் போலியானது என காவல் துறை அதிகாரிகள் அறிவித்தனர். இதனால், மீண்டும் நீதிமன்றப் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு கடந்த 6 வாரங்களில் 5 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், அஜ்மீர் தர்கா மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களும் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: அதிகரிக்கும் விவாகரத்து! இனி திருமணங்கள் இல்லை: பெங்களூர் கோயில் அதிரடி!
The Rajasthan High Court has received a bomb threat for the third day today (Dec. 10).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.