கோப்புப் படம் ENS
இந்தியா

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

பிகார் மாநிலத்துக்கு குளிர் அலைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் மாநிலத்தில், குளிர் அலைகள் தொடர்ந்து வீசி வருவதால் 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில், குளிரின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றது. இதனால், பல்வேறு முக்கிய நகரங்களில் பனிமூட்டம் ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து மிகவும் அபாயகரமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் பிகாரின் 12 வட மாவட்டங்களுக்கு குளிர் அலைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும், பாட்னா உள்ளிட்ட மீதமுள்ள சுமார் 24 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதில், மேற்கு சம்பாரன், கிழக்கு சம்பாரன், சீதாமர்ஹி, ஷியோஹர், மதுபானி, தார்பங்கா, முசாபர்பூர், சமஸ்திபூர், வைஷாலி, சரண், சிவன் மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் டிச.22 ஆம் தேதி வரையில் குளிர் அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காலை மற்றும் இரவு நேரங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் பிகார் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அவர்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

In Bihar state, due to the continuing cold wave, the India Meteorological Department has issued a 'red alert' for 12 districts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

SCROLL FOR NEXT