ஹௌராவில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உடல் கருகி பலி!
மேற்கு வங்கத்தில் தீ விபத்தில் குடும்பம் பலியானது பற்றி..
மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஜாய்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சௌரியா கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் துர்ஜோதன் டோலுய்(72), அவரது மகன் துத்குமார் டோலுய் (45) மருமகள் ஷிவானி டோலுய் (400 மற்றும் அவரது மகள் ஷம்பா டோலுய் (15) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
குடிசையிலான வீடு எப்படித் தீப்பிடித்தது என்பதைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை அணைத்தனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக உலுபேரியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என போலீஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. துத்குமாருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவர் மாநிலத்திற்கு வெளியே புலம்பெயர் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
Four members of a family were charred to death in a fire at their house in West Bengal's Howrah district, officials said on Monday morning.
இதையும் படிக்க: தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ்! விஜய் கொண்டாட்டம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.