ஹரியாணாவில் 10 பாம்புகளைக் கொன்று மரத்தில் தொங்கவிட்ட நபரால் பரபரப்பு
ஹரியாணாவில் 10 பாம்புகளைக் கொன்று மரத்தில் தொங்கவிட்ட நபரால் பரபரப்பு காணப்பட்டது.
ஹரியாணாவில் 10 பாம்புகளைக் கொன்று மரத்தில் தொங்கவிட்ட நபரால் பரபரப்பு காணப்பட்டது.
ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் நபர் ஒருவர் 10 பாம்புகளைக் கொன்று அவற்றை மரத்தில் தொங்கவிட்டுள்ளார். இதனைக் கண்டதும் அப்பகுதியில் மக்கள் கூடினர். நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார் பாம்புகளை மீட்டு வனத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் கூறுகையில், அந்த நபர் தனது வீட்டின் அருகே உள்ள மண் குடிசையில் இருந்து மாட்டுச் சாணக் கட்டிகளை அகற்றிபோது, அத்தனைப் பாம்புகளும் வெளியே வந்துள்ளது.
Advertisement
Advertisement
பாம்புகளை அந்த இடத்திலேயே கொன்று, புன்ஹானா–ஹோடல் சாலையோரத்தில் உள்ள மரத்தில் பிறகு அவற்றை தொங்கவிட்டதாக கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட பாம்புகள் சுமார் ஒரு அடி முதல் ஏழு அடி வரை நீளமுடையவையாக இருந்ததாகவும், இதனால் அந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டனர்.
வனவிலங்குகளை கொல்வதும் அவற்றை பொதுமக்கள் முன் தொங்கவிடுவதும் குற்றம் எனக் கூறி குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
வனவிலங்கு துறை குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிச்சோர் காவல் நிலைய அதிகாரி ஜஸ்விர் சிங் தெரிவித்தார்.
A man allegedly killed 10 snakes and hung them from a tree in Nuh district, drawing flak from wildlife activists, police said on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.