FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!

உ.பி.யில் திருமண விருந்து சாப்பிட்ட 40 பேர் உடல்நல பாதிப்பு!

Updated On : 11 பிப்ரவரி 2025, 4:36 pm IST
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் ஃபரித்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. ஃபரித்பூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, வயிற்று வலி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒருசிலர் உத்தரகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Advertisement

ஃபரித்பூர் கிராம ஆசிரியர் ராஜ்பால் சிங்கின் மகன் விபின் குமாரின் திருமண நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உணவு விஷமானதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. தகவலின்படி உணவு பாதுகாப்புத் துறையினர் திருமண விழாவில் வழங்கப்பட்ட உணவினை சேகரித்து சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments