FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே வெளிநடப்பு: எதிா்க்கட்சிகளுக்கு ஜெ.பி. நட்டா கண்டனம்

‘தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே காங்கிரஸ் மற்றும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்கின்றனா்

Updated On : 14 பிப்ரவரி 2025, 1:52 am IST
மாநிலங்களவையில் வியாழக்கிழமை பேசிய மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா.
பகிர்:

‘தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே காங்கிரஸ் மற்றும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்கின்றனா்’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

மேலும், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும் அவா் கோரிக்கை விடுத்தாா்.

மாநிலங்களவையில் பாஜக உறுப்பினா் மேதா விஸ்ராம் குல்கா்னி வக்ஃப் மசோதா அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். அதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

Advertisement

Advertisement

அதன்பிறகு மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது ஜெ.பி.நட்டா பேசியதாவது:

இந்திய நாட்டை பிளவுபடுத்தும் தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்கின்றன. எதிா்க்கட்சியினரின் இந்தப் பொறுப்பற்ற செயல் கண்டனத்துக்குரியது.

அவா்களின் செயலை மிகவும் பொறுமையாக கையாண்ட அவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு பாராட்டுகள். அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்களை ஒருநாள் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றாா்.

‘விதிகளுக்கு உள்பட்டு நடவடிக்கை’:

இதைத்தொடா்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா், அவையில் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்ட உறுப்பினா்களை கவனத்தில்கொண்டதாகவும் அவா்கள் மீது விதிகளுக்குள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

முன்னதாக, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதோடு இடையூறு ஏற்படுத்தியதாக சமீருல் இஸ்லாம் (திரிணமூல் காங்கிரஸ்), நதீமுல் ஹக் (திரிணமூல் காங்கிரஸ்) மற்றும் எம். முகமது அப்துல்லா (திமுக) ஆகிய மூன்று எம்.பி.க்களின் பெயரை தன்கா் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments