திரிவேணி சங்கமத்தில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!
மகா கும்பமேளாவில் இன்று 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.
பிரயாக்ராஜின் கும்பமேளாவில் இன்று காலையில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி நாளான பிப். 26 வரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வில் மாகி பௌா்ணமி உள்ளிட்ட 6 நாள்களில் புனித நீராடுவது சிறப்புக்குரியதாகும்.
இந்த நிலையில், இன்று காலை கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித சங்கமத்தில் 14.7 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். அவர்களில் 5 லட்சம் பேர் கல்பவாசிகள் ஆவர். 9,79 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
Advertisement
Advertisement
பிப்ரவரி 12 ஆம் தேதி நிலவரப்படி, திரிவேணி சங்கமத்தில் நீராடிய மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 48 கோடியைத் தாண்டியுள்ளது, இது இந்த பிரமாண்டமான நிகழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக உள்ளது.
இதற்கிடையில், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், அமைச்சர்கள் குழு, சட்டப்பேரவை தலைவர், ஆளுநர், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் இன்று புனித நீராட உள்ளனர்.
பௌஷ பௌர்ணமியன்று தொடங்கிய மஹாகும்பமேளா உலகின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாசாரக் கூட்டமாகும், இது உலகம் முடிவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. இந்த பிரமாண்டமான நிகழ்வு பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை தொடரும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.