FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிப்பு

தில்லி காவல் துறை மற்றும் ரயில்வே காவல் படையினா் (ஆா்பிஎஃப்) ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 17 பிப்ரவரி 2025, 4:23 am IST
பகிர்:

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் தில்லி காவல் துறை மற்றும் ரயில்வே காவல் படையினா் (ஆா்பிஎஃப்) ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

ரயில்கள் குறித்து தகவலை ஒலிபெருக்கிகள் மூலம் காவலா்கள் தொடா்ந்து வழங்கி வந்தனா். ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆா்பிஎஃப் மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இது தொடா்பாக ரயில்வேக்கான துணை காவல் ஆணையா் கேபிஎஸ் மல்ஹோத்ரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அதிக பயணிகள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்களுக்கும் வழக்கமான ரயில்களுக்கும் கூடுதல் பணியாளா்களை நாங்கள் பணியமா்த்தியுள்ளோம். கயிறு தடுப்புகள் இருப்பதால் யாரும் முன்னோக்கி நகரவில்லை, எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது’ என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments