கேரளம்: சுங்கத்துறை குடியிருப்பில் ஒரே வீட்டில் மூன்று சடலங்கள்!
கேரளத்தில் சுங்கத்துறை குடியிருப்பில் ஒரே வீட்டில் மூன்று சடலங்கள் கிடந்துள்ளன.
கேரள மாநிலம் எர்ணாகும் மாவட்டத்தில் மத்திய சுங்கத் துறை குடியிருப்பில், ஒரு வீட்டிலிருந்து மூன்று உடல்கள் கைப்பற்றப்பட்டு உடல் கூறாய்வு செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர்கள், ஜிஎஸ்டி கூடுதல் ஆணையராக இருந்த மணீஷ் விஜய், அவரது தாய் சகுந்தலா, சகோதரி ஷாலினி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களது பூர்வீகம் ஜார்க்கண்ட் மாநிலம்.
மூவரது உடல்களும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மணீஷ் மற்றும் ஷாலினி ஆகியோர் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையிலும் அவர்களது தாய் உடல் படுக்கையிலும் கிடந்துள்ளது.
இயற்கைக்கு மாறான மரணம் என்று பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிப். 20ஆம் தேதி மூன்று பேரின் உடல்களைக் கண்டுபிடித்தோம். அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறோம். உடல் கூறாய்வு முடிந்துவிட்டது. அந்த அறிக்கை வந்தபிறகுதான் மூவரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரிய வரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.