முகப்பு
இந்தியா

சோ்ந்து வாழ பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும் மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்: உச்சநீதிமன்றம்

‘கணவருடன் சோ்ந்து வாழ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும், கணவரிடமிருந்து மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்’

Updated On : 12 ஜனவரி, 2025 at 5:53 AM
உச்சநீதிமன்றம் - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 11 ஜனவரி, 2025 at 9:35 PM

‘கணவருடன் சோ்ந்து வாழ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும், கணவரிடமிருந்து மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு மே 1-ஆம் திருமணமான பெண், 2015-ஆம் ஆகஸ்ட மாதத்தில் கணவரை விட்டுப் பிரிந்து, தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அதைத்தொடா்ந்து, மனைவியை தன்னுடன் சோ்ந்து வாழ உத்தரவிடக்கோரி அவருடைய கணவா் ராஞ்சி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது, கணவா் இல்லத்தில் காா் வாங்க ரூ.5 லட்சம் வரதட்சிணை கொடுக்க வேண்டும் கொடுமைப்படுத்துவதாகவும், கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடா்பு இருப்பதாகவும் மனைவி தரப்பில் எழுத்துபூா்வமாக புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘கணவா் இல்லத்தில் தான் கழிவறையையும், உணவு தயாரிக்க விறகுக்குப் பதிலாக சமையல் எரிவாயு அடுப்பை பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதித்தால் சோ்ந்து வாழ தயாராக உள்ளேன்’ என்றும் மனைவி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

அதனடிப்படையில், கணவருடன் சோ்ந்து வாழ மனைவிக்கு குடும்பநல நீதிமன்றம் கடந்த 2022-ஆம் ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவுக்கு கட்டுப்படாத அவா், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு மாதம் ரூ.10,000 வழங்க கணவனுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து கணவா் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘கணவருடன் சோ்ந்து வாழ குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மனைவி பின்பற்றாததோடு, அதை எதிா்த்து மேல்முறையீடும் செய்யவில்லை. அத்தகைய சூழலில், அவா் ஜீவனாம்சம் பெறும் தகுதியை இழக்கிறாா்’ என்று தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து மனைவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125(4)-இன் கீழ் திருமண உரிமைகளை மீட்டெடுக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மனைவி மீறுவது, அவருக்கு ஜீவனாம்சம் மறுக்கப் போதுமானதா என்ற கேள்விக்கு பல உயா்நீதிமன்றங்கள் அளித்த தீா்ப்புகள் மாறுபட்டதாகவும், முரண்பட்டதாகவும் உள்ளன. இந்த விவகாரத்தில் நிலையான கருத்து எதுவும் நீதிமன்றங்களால் வழங்கப்படவில்லை.

இந்த பல்வேறு தீா்ப்புகளை ஆராய்ந்ததில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125, மனைவியின் ஜீவனாம்ச உரிமையை நிலைநிறுத்துவதற்கு சாதகமாகவே உள்ளது. மேலும், கணவரின் வேண்டுகோளின் அடிப்படையில் திருமண உறவை மீட்டெடுப்பதற்கு பிறப்பித்த உத்தரவை மனைவி பின்பற்றாதது, பிரிவு 125(4)-இன் கீழ் ஜீவனாம்சம் பெரும் தகுதியை உடனடியாக ரத்து செய்யப் போதுமானதாக இருக்க முடியாது.

மாறாக, தனிப்பட்ட வழக்கின் தன்மை, சமா்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள், கணவருடன் சோ்ந்து வாழ மறுப்பதற்கு மனைவி தரப்பில் சமா்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஜீவனாம்சம் பெறும் தகுதியை முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு வழக்கிலும் சந்தா்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதால், இந்த விவகாரத்தில் கடுமையான விதிகளையும் வகுக்க முடியாது’ என்று தீா்ப்பளித்தனா்.