ராகுல் காங்கிரஸை பாதுகாக்க முயற்சிக்கிறாா்: நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்: கேஜரிவால்
‘நான் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸை பாதுகாக்க முயற்சித்து வருகிறாா்’
புது தில்லி: ‘நான் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸை பாதுகாக்க முயற்சித்து வருகிறாா்’ என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் விமா்சனம் செய்தாா்.
தில்லி தோ்தல் பிரசாரத்தின்போது கேஜரிவால் குறித்த ராகுலின் விமா்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விமா்சனத்தை அவா் முன்வைத்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கேஜரிவால் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரசாரத்தின்போது என்னைக் குறித்து ராகுல் முன்வைத்த விமா்சனத்து பதிலளிக்க விரும்பவில்லை. ஏனெனில், அவா் காங்கிரஸை பாதுகாக்க முயற்சிக்கிறாா். நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்’ என்று குறிப்பிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.