FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நிஃப்டி 50-ல் இணையும் ஜியோ, சொமாட்டோ!

ஜியோ ஃபினான்சியல் சர்வீஸ் மற்றும் சொமாட்டோ ஆகிய இரு நிறுவனங்களும் நிஃப்டி 50 பட்டியலில் இணையவுள்ளன.

14 ஜனவரி 2025, 6:01 pm IST
கோப்புப் படம்
பகிர்:

நிதிச் சேவைகளை வழங்கிவரும் ஜியோ ஃபினான்சியல் சர்வீஸ் மற்றும் சொமாட்டோ ஆகிய இரு நிறுவனங்களும் நிஃப்டி 50 பட்டியலில் இணையவுள்ளன.

நிஃப்டி 50 குறியீட்டில் இருந்து வெளியேறும் இரு நிறுவனங்களுக்கு பதிலாக இவை இணையவுள்ளன.

இது குறித்து ஜே.எம். ஃபினான்சியல் நிறுவனத்தின் நிபுணர்குழு குறிப்பிட்டதாவது,

Advertisement

Advertisement

நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய இரு நிறுவனங்கள் நிஃப்டி பட்டியலில் இருந்து வெளியேறவுள்ளன.

நிஃப்டியில் ஏற்படும் இந்த மாற்றங்கள் குறித்து பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். மார்ச் 31 க்குள் இதில் ஏற்படும் மாற்றங்கள் சமநிலைப்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டானியா நிறுவனத்துக்கு பதிலாக எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் நிஃப்டி 50 யில் இருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பிரிட்டானியா வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.இ., 45 பங்குகள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, சொமாட்டோ மற்றும் ஜியோ ஃபினான்சியல் சர்வீஸ் அதிகாரப்பூர்வமாக நிஃப்டி பட்டியலில் இணையும்.

ஜியோ ஃபினான்சியல் சர்வீஸ் நிறுவனம் நிஃப்டியில் இணைவதன் மூலம் 356 மில்லியன் டாலர் முதலீடுகளுக்கு வழிவகுக்கும். பிரிட்டானியா வெளியேறுவதன் மூலம் 229 மில்லியன் இழப்புக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments