முகப்பு
இந்தியா

காமராஜரின் சிந்தனைகளும், சமூக நீதி உறுதிப்பாடும் மகத்தான ஊக்கமளிக்கும்! - பிரதமர் மோடி

காமராஜரின் சிந்தனைகளும், சமூக நீதி உறுதிப்பாடும் மகத்தான ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி கூறியிருப்பதைப் பற்றி...

Updated On : 15 ஜூலை, 2025 at 4:44 AM
பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:

காமராஜரின் சிந்தனைகளும், சமூக நீதி உறுதிப்பாடும் மகத்தான ஊக்கமளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதையொட்டி, அரசியல் தலைவர்கள் காமராஜருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement

அந்தப் பதிவில், “காமராஜரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார்.

அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Prime Minister Narendra Modi has praised Kamaraj's thoughts and commitment to social justice, saying they are a great inspiration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments