டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய பென்ஸ் காருக்கு பதிவு எண் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம்!
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் காருக்கு பதிவு எண் கோரி உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு குறிப்பிட்ட பதிவு எண்ணை ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்ற பதிவாளர், தில்லி போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் 2 ஆண்டுகள் பணிக்குப் பிறகு கடந்த 2024 நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.
அயோத்தி வழக்கு, அரசியலமைப்பின் 370-வது பிரிவு உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இவர் ஓய்வு பெற்றும் அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாதது குறித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
Advertisement
Advertisement
இந்நிலையில் டி.ஒய்.சந்திரசூட் புதிதாக மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு அவர் கேட்டுள்ள குறிப்பிட்ட பதிவு எண்ணை வழங்கும்படி உச்சநீதிமன்ற பதிவாளர், தில்லி போக்குவரத்து ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் முன்னாள் தலைமை நீதிபதியின் காருக்கு அந்த எண்ணை விரைவாக ஒதுக்கீடு செய்து அவருக்கு தகவல் தெரிவித்தால் நான் நன்றியுள்ளவராக இருப்பேன் என்று கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தக் கடிதம் ஜூலை 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் தலைமை நீதிபதியின் காருக்கு பதிவு எண் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம் எழுதியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
SC registrar writes to transport commissioner seeking specific number for ex-CJI Chandrachud's car
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.