FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிக்கிம் நிலச்சரிவு: 10வது நாளில் 2 பேரது உடல்கள் மீட்பு!

சிக்கிம் நிலச்சரிவில் பலியான இருவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Updated On : 10 ஜூன் 2025, 11:55 am IST
மீட்புப் பணியில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்... - ANI
பகிர்:

சிக்கிம் நிலச்சரிவில் மாயமானவர்களில் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிக்கிமின் மங்கன் மாவட்டத்திலுள்ள சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது, இதில், அங்கு அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் உள்பட பல கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

இதனைத் தொடர்ந்து, அந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட ராணுவ முகாமிலிருந்த 3 வீரர்கள் பலியான நிலையில் 6 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று (ஜூன் 10) ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது, அவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், நேற்று (ஜூன் 9) மீட்புப் படையினர் ராணுவ வீரரான பி.கே. சையினுதீன் என்பவரது உடலை மீட்டனர்.

இதன்மூலம், மாயமான 6 பேரில், மூவரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னதாக, நிலச்சரிவு ஏற்பட்ட சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 2,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள், இந்திய விமானப் படை, ராணுவப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சரக்குக் கப்பலில் 2-வது நாளாக எரியும் தீ! அணைக்கப் போராடும் கடற்படை வீரர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments