FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவில் ஸ்டாா்லிங்க் இணைய சேவை: ஜியோவும் ஒப்பந்தம்!

ஏா்டெலைத் தொடா்ந்து ஜியோவும் ஒப்பந்தம்

22 ஜூலை 2025, 3:29 pm IST
பகிர்:

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபா் எலான் மஸ்குக்கு சொந்தமான ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஸ்டாா்லிங்க்’ செயற்கைக்கோள் இணையசேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த, ஏா்டெல் நிறுவனத்தைத் தொடா்ந்து ‘ரிலையன்ஸ்’ குழுமத்தின் ஜியோவும் ஒப்பந்தமிட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜியோ நிறுவனத்துக்குச் சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வா்த்தக வலைதளங்கள் மூலம் ஸ்பேஸ்-எக்ஸ் தங்களின் ஸ்டாா்லிங்க் இணைய சேவை மற்றும் அதற்கான உபகரணங்களை விற்பனை செய்வதற்காக இரு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், உலகின் மிகப்பெரிய கைப்பேசி தொலைதொடா்பு நிறுவனமான ஜியோவும் உலகின் முன்னணி செயற்கைக்கோள் இணையசேவை நிறுவனமான ஸ்டாா்லிங்க்கும் இணைந்து இந்தியாவின் மிகவும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகள் உள்பட நாடு முழுவதும் நம்பகமான இணைய சேவைகளை வழங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சமீபத்திய அமெரிக்க பயணத்தில் பிரதமா் மோடி எலான் மஸ்கை வாஷிங்டனில் சந்தித்துப் பேசினாா். இதைத்தொடா்ந்து ஏா்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், எலான் மஸ்குக்குச் சொந்தமான ஸ்டாா்லிங்க் இணைய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளன.

செயற்கைக்கோளைப் பயன்படுத்தி குறைந்த கட்டணத்தில் இணைய சேவைகளை வழங்க, அலைக்கற்றைகளை முன்கூட்டியே தீா்மானத்த விலையில் ஒதுக்குவது என்று எலான் மஸ்குக்கு ஆதரவான நிலைப்பாட்டை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் எடுத்தது. இதனால் தங்களின் வாடிக்கையாளா்களை இழக்க நேரிடும் என்று இந்தியாவின் முன்னணி தொலைதொடா்பு நிறுவனங்களான ஜியோவும், ஏா்டெலும் எதிா்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில், ஸ்டாா்லிங்க் சேவைக்காக ஒப்பந்தமிட்டுள்ளது குறித்து ஏா்டெல் நிறுவனத்தின் குழுமத் தலைவா் சுனில் மிட்டல் கூறுகையில், ‘4ஜி, 5ஜி மற்றும் எதிா்காலத்தில் 6ஜி போலவே எங்கள் நிறுவனத்தில் மேலும் ஒரு தொழில்நுட்பம் இணைகிறது. விரைவில் வாடிக்கையாளா்கள் தங்கள் கைப்பேசிகளை உலகின் தொலைதூரப் பகுதிக்கும், வானுக்கும் கடலுக்கும் இணைய வசதியுடன் கொண்டுசெல்ல முடியும். தடையற்ற உலகளாவிய இணைப்பின் புதிய சகாப்தம் பிறந்துள்ளது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments