FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

Updated On : 26 மே 2025, 6:53 am IST
தேர்தல் ஆணையம்
பகிர்:

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

அதன்படி குஜராத்தில் 2 தொகுதிகளுக்கும் கேரளம், மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தலா 1 தொகுதிக்கும் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

குஜராத் கடி தொகுதி, மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் மற்றும் பஞ்சாப்பின் லூதியானா ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்கள் இறந்ததாலும் குஜராத்தின் விசாவதாா் மற்றும் கேரளத்தின் நீலம்பூா் தொகுதிகளின் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தைத் தொடா்ந்தும் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த தொகுதிகளில் ஜூன் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments