பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!
அமித் ஷாவின் மகனும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான ஜெய் ஷாவுக்கு பேட் கூட பிடிக்கத் தெரியாது - ராகுல் விமர்சனம்
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகனும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான ஜெய் ஷாவுக்கு பேட் கூட பிடிக்கத் தெரியாது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிகாரின் பாகல்பூரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, ``நீங்கள் அதானி, அம்பானி அல்லது அமித் ஷாவின் பிள்ளைகளாக இருந்தால் மட்டுமே உங்களால் பெரிய கனவு காண முடியும்.
அமித் ஷாவின் மகன் ரன் எடுப்பாரா என்பதைக்கூட விட்டு விடுங்கள், அவருக்கு மட்டையை (Bat) எப்படி பிடிப்பது என்றுகூட தெரியாது. ஆனாலும் அவர்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்.
Advertisement
Advertisement
கிரிக்கெட்டில் அனைத்தையும் அவர்தான் கட்டுப்படுத்துகிறார். அவர் ஏன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்? ஏனெனில், பணம்தான் காரணம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, விவசாயிகளின் நிலங்களைப் பறித்து அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு பரிசளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஜெய் ஷா தலையீட்டில் பிரதிகாவுக்கும் பதக்கம்
He can't even hold a bat: Congress MP Rahul Gandhi questions Jay Shah's ICC chairmanship
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.