இந்தியாவிலும் எதிரொலித்தது ஆரக்கிள் பணி நீக்க நடவடிக்கை!
இந்தியாவிலும் ஆரக்கிள் பணி நீக்க நடவடிக்கை எதிரொலியாக பலரும் பாதிப்பு..
உலகம் முழுவதும் ஆரக்கிள் நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுமார் 30 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தகவல்தொழில்நுட்ப நிறுவனம் ஆரக்கிள், தங்களது நிறுவனத்தில் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
முதற்கட்டமாக, இந்தியாவில் உள்ள ஆரக்கிள் நிறுவனங்களில் 2,000 முதல் 2,500 வரையிலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், மற்றொரு தகவல், இது 12 ஆயிரம் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள ஆரக்கிள் நிறுவனங்களில் 30 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு, இது குறித்த மின்னஞ்சல்கள், நிறுவன ஊழியர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்த மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றது முதலே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.