முகப்பு
இந்தியா

ஆந்திரத்தின் தலைநகராக அமராவதி: இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றம்!

ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது.

Updated On : 2 ஏப்ரல் 2026, 4:25 pm IST
ஆந்திரத்தின் தலைநகராக அமராவதி மசோதாவுக்கு ஒப்புதல் - விடியோ க்ளிப்
பகிர்:

ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா, மாநிலங்களவையில் இன்று (ஏப். 2) ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக, புதன்கிழமையில் மக்களவையிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இம்மசோதா குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரின் ஒப்புதல் கிடைத்ததும், 2026 ஜூன் 2 முதல் ஆந்திர தலைநகா் அமராவதி என்று சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைத்துவிடும்.

Advertisement

Advertisement

பின்னணி: ஒருங்கிணைந்த ஆந்திரம் 2 மாநிலங்களாக ஆந்திரம், தெலங்கானா எனப் பிரிக்கப்பட்டபோது, முந்தைய ஆந்திர மாநில தலைநகராக விளங்கிய ஹைதராபாத் நகரம், தெலங்கானா மாநிலத் தலைநகராக்கப்பட்டது.

அதேநேரத்தில் ஆந்திரத்துக்கு அமராவதி தலைநகராக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 2019-ல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், ஒரே தலைநகரம் அமைப்பதற்குப் பதிலாக 3 தலைநகரங்கள் இருக்கும் என அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.

இந்த நிலையில், மீண்டும் 2024 தோ்தலில் தெலுங்கு தேசம் கட்சி வென்று ஆட்சியமைத்ததும் அமராவதி மீண்டும் தலைநகராக்கப்பட்டது. இதுதொடா்பான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது ஒப்புதலும் பெற்றுள்ளது.

தலைநகராக அமராவதி ஒப்புதலைப் பெற்றதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியான தெலுங்கு தேச கட்சியினர் கேக் வெட்டிக் கொண்டாடி வருகின்றனர்.

summary

Parliament passes Andhra Pradesh Reorganisation (Amendment) Bill, 2026 to recognise Amaravati as permanent capital of state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.