மமதாவின் ஹெலிகாப்டர் அருகில் பறந்த மர்ம ட்ரோனால் பரபரப்பு!
மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அருகில் அடையாளம் தெரியாத மர்ம ட்ரோன் பறந்தது குறித்து...
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அருகில் மர்ம ட்ரோன் ஒன்று பறந்ததால் அங்கு மிகவும் பரபரப்பான சூழல் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன.
இதனால், ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான மமதா பானர்ஜி அம்மாநிலம் முழுவதும் பயணித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, மால்டா நகரத்தில் சனிக்கிழமை (ஏப். 4) அன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் மமதா மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்கப் புறப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், முதல்வர் மமதா அவரது ஹெலிகாப்டரின் அருகில் வந்தபோது அப்பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. இதையடுத்து, அந்த மர்ம ட்ரோன் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 26 அன்று முதல்வர் மமதா பயணித்த விமானம் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றால், கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தது குறிப்பிடத்தக்கது.