மோடி ஒரு மாயாஜாலக்காரர்! ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை செய்தவர்! ராகுல் பேச்சு
தொகுதி மறுவரையறை விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு...
பிரதமர் மோடி ஒரு மாயாஜாலக்காரர் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நேற்று(ஏப். 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.
விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,
Advertisement
Advertisement
"பாஜக என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமே. பாஜக என்பது இந்தியா அல்ல. பிரதமரும் பாஜகவும் இந்தியாவின் ராணுவ வீரர்கள் இல்லை. பிரதமர், பாஜகவைப் பற்றி ஏதாவது பேசினால் உடனடியாக ராணுவ வீரர்கள் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.
நம்மிடம் ஒரு பிரபலமான வித்தைக்காரர் இருக்கிறார். பல வித்தைகளை நிகழ்த்துகிறார். பாலகோட் தாக்குதல், பணமதிப்பிழப்பு, ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜால வித்தைகளை நிகழ்த்திய அவர், தற்போது கையும் களவுமாக பிடிபட்டுவிட்டார்.
மேஜிக் காட்டுவதுபோல 3 மசோதாக்களையும் ஒன்றன்மீது ஒன்றாக மறைத்துக் கொண்டு வந்துள்ளார். அவருக்கும் தொழிலதிபருக்கும் இடையே ஒரு கூட்டணி இருப்பதை அனைவரும் அறிவார்கள்.
மசோதா நிறைவேறாது எனத் தெரிந்தும் பீதியில் இதனை கொண்டுவந்துள்ளனர். தென் மாநிலங்கள் பயப்பட வேண்டாம். இந்த மசோதாக்கள் நிறைவேறாது" என்று பேசினார்.
பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி இவ்வாறு பேசியதும் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
பிரதமர் குறித்து ராகுல் காந்தி முறையற்ற சொற்களைப் பயன்படுத்துவதாகவும் பாலகோட் தாக்குதல்கள், 'ஆபரேஷன் சிந்தூர்' ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி நாட்டின் நற்பெயருக்கும், ராணுவத்திற்கும் களங்கம் விளைவிப்பதாகவும் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். தொடர்ந்து பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
LoP Rahul Gandhi says, PM Modi is famous magician of Balakot, demonetization, Sindoor
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.