ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் என். பாஸ்கர ராவ் காலமானார்
பிரிக்கப்படாத ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என். பாஸ்கர ராவ் காலமானார்.
பிரிக்கப்படாத ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என். பாஸ்கர ராவ் காலமானார்.
1984-ல் பிரிக்கப்படாத ஆந்திர பிரதேசததின் முதல்வராக இருந்த என். பாஸ்கர ராவ் (90), உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பாஸ்கர ராவ் இன்று உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
தெலுங்கு தேசக் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான என். பாஸ்கர ராவ், 1984-ல் ஒரு மாதம் மட்டுமே முதல்வராகப் பணியாற்றினார். மாநில வரலாற்றில் மிகக் குறுகிய காலம் (1984 ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 16) முதல்வராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.
இவரது இறுதிச் சடங்கு, ஹைதராபாதில் உள்ள பஞ்சகுட்டாவில் வியாழக்கிழமையில் நடைபெறும்.
Former Chief Minister of undivided Andhra Nadendla Bhaskar Rao dies at 90
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.