எல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை: ராஜ்நாத் சிங்
பயங்கரவாதத்திற்கு எதிராக என்றுமே இரட்டை நிலைப்பாடு இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளது குறித்து...
பயங்கரவாதத்திற்கு எதிராக என்றுமே இரட்டை நிலைப்பாடு இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஏப். 28) தெரிவித்தார்.
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பான புகலிடங்கள் வழங்கும் அமைப்புகள், நிறுவனங்கள், நாடுகளுக்கு எதிராக ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புத் துறை உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கஜகஸ்தான் தலைநகர் பிஷ்கெக் பகுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு இன்று நடைபெற்றது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஹா ஆசிஃப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Advertisement
இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் உரையாற்றிய ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பான புகலிடங்களை வழங்கும் நாடுகள், நிறுவனங்கள், வலையமைப்புகளுக்கு எதிராக ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பிராந்திய பாதுகாப்புத் துறையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பயங்கரவாதத்தின் மையங்கள் நியாயமான தண்டனைகளில் இருந்து இனி தப்ப முடியாது என்பதை இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்தது.