ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு: அரசுடன் போராட்டக்குழு பேச்சுவார்த்தை!
தேவேந்திர நாத் மஹ்தோ தலைமையிலான குழுவினருடன் ஜார்க்கண்ட் அரசு சனிக்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி..
ஜார்க்கண்டில் வேலைவாய்ப்புத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, தேவேந்திர நாத் மஹ்தோ தலைமையிலான குழுவினருடன் ஜார்க்கண்ட் அரசு சனிக்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பிரச்னைக்காக மஹ்தோ மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், ராஞ்சியில் உள்ள மாநில அரசு விருந்தினர் மாளிகையில் இக்கூட்டம் நடைபெற்றது.
கடந்த இரண்டு வாரங்களாக மாநிலத் தலைநகரில் நடைபெற்ற தீவிரப் போராட்டங்களைத் தொடர்ந்து, அக்குழுவின் எட்டு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு அரசு அதிகாரிகளைச் சந்தித்தது.
Advertisement
Advertisement
14-வது ஜார்க்கண்ட் பொதுப்பணி ஆணைய சிவில் சர்வீசஸ் தேர்வையும், அந்த அமைப்பால் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா (ஜேஎல்கேஎம்) தலைவரான மஹ்தோ பிடிஐ-யிடம் தெரிவித்தார்.
மேலும், முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சிபிஐ மூலமாகவோ அல்லது மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு மூலமாகவோ சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
The Jharkhand government on Saturday held talks with the Devendra Nath Mahto-led faction of the protesting job aspirants over the alleged paper leaks.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.