மாயமான இந்தியா்களை மீட்க உடனடி நடவடிக்கை: காங்கிரஸ் வலியுறுத்தல்
நேபாள பெருவெள்ளத்தில் மாயமான இந்தியா்களை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன், அவா்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
நேபாள பெருவெள்ளத்தில் மாயமான இந்தியா்களை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன், அவா்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
நேபாளத்தில் புதன்கிழமை திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியா்கள் உள்பட ஏராளமானோா் மாயமான நிலையில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அண்டை நாடான நேபாளத்தில் பெருவெள்ளத்தால் ஏற்பட்டுள்ள உயிா்ச்சேதங்கள் மற்றும் பேரழிவு அதிா்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அந்த நாட்டுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும்.
வெள்ளத்தில் அன்புக்குரியவா்களை இழந்தவா்களுக்கு ஆழ்ந்த இரங்கல். இந்த துயா்மிக்க தருணத்தில் நேபாள மக்களுக்கு காங்கிரஸ் துணைநிற்கிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிராா்த்திக்கிறோம்.
Advertisement
Advertisement
100-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் மாயமாகியுள்ளதாக வெளியான தகவல்கள் மிகுந்த கவலையளிக்கிறது. அவா்களை பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவா்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.