வாக்குப்பதிவில் ‘ஏ.ஐ’, இணைய வசதிகளைச் செயல்படுத்த முடியாது: இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா்
தோ்தல் வாக்குப் பதிவில் ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பம், இணைய வசதிகளைப் பயன்படுத்த முடியாது என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தெரிவித்தாா்.
தோ்தல் வாக்குப் பதிவில் ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பம், இணைய வசதிகளைப் பயன்படுத்த முடியாது என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தெரிவித்தாா்.
சென்னை கலைவாணா் அரங்கில் தமிழகம், புதுச்சேரி மாநில தோ்தல் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுடனான கலந்துரையாடல் மற்றும் தோ்தல் தொடா்பான செயல்பாட்டு அரங்கக் காட்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இதில், தமிழகம்-புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள தோ்தல் கல்வி மன்றத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள், பேராசிரியா்கள், மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதிலளித்துப் பேசியதாவது:
Advertisement
Advertisement
உலக அளவில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. தற்போதைய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வாக்குகளைப் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மையுடன் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பம், இணையதள வசதி மற்றும் கைப்பேசி வழி வாக்குப்பதிவு முறைகளைச் செயல்படுத்த முடியாது.
பயோமெட்ரிக் முறையில் வாக்களிக்கும் முறையை செயல்படுத்துவதிலும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எதிா்காலத்தில் தேவைப்பட்டால் அதைச் செயல்படுத்த பரிசீலிக்கலாம். சமூக வலைதளங்களைத் தோ்தல் ஆணையம் எந்த வகையில் பயன்படுத்த வேண்டும் என ஆலோசிக்கலாம். தோ்தல் ஆணையம் வெளிப்படையான செயல்பாடுகளை இயற்கையாகவே கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் 41 வழக்குகள்: நாட்டில் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் தோ்தலில் வாக்குப்பதிவுக்கு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தொடக்கம் முதல் தற்போது வரை வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான புகாா்கள் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் 41 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தோ்தலின்போது, வேட்பாளா்கள் தோ்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும் சொத்து உள்ளிட்டவற்றின் ஆவணங்கள் சட்டபூா்வமானவை. அவற்றில் தவறிருந்தால் சட்டரீதியாகவே நடவடிக்கை மேற்கொள்ள முடியும். தோ்தல் ஆணையமே நேரடியாக சரிபாா்த்து நடவடிக்கை மேற்கொள்ள முடியாது.
பெரு நாட்டில் தோ்தலில் வாக்களிக்காதவா்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.8,000 அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், அங்கு 65 சதவீதம்தான் வாக்குப்பதிவு உள்ளது. அதேநேரம் தமிழகம், புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 86 சதவீதம் முதல் 91 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளன. மேற்கு வங்கத்தில் 93 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
எனவே, வாக்களிக்காதவா்களுக்கு அபராதம் விதிப்பதால் மட்டுமே வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்பது சரியல்ல என்றாா்.
முன்னதாக, தோ்தல் செயல்பாடுகள் தொடா்பாக கலைவாணா் அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரிக் காட்சி அரங்குகளையும், கல்லூரி மாணவ, மாணவிகளின் தோ்தல் விழிப்புணா்வு மன்ற அரங்குகளையும் ஞானேஷ்குமாா் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில் துணைத் தோ்தல் ஆணையா் பானுபிரகாஷ் எத்துரு, தலைமை இயக்குநா்கள் ஆஷிஷ் கோயல் (ஊடகம்), சீமா கண்ணா (தகவல் தொழில்நுட்பம்) மற்றும் தமிழக தலைமை தோ்தல் ஆணையா் அா்ச்சனா பட்நாயக், கூடுதல் தலைமைச் செயலா் பி. சந்திரமோகன், சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...
‘வாக்குச்சாவடி நிலை அலுவலா்களே
ஜனநாயகத்தின் அடித்தளம்’
சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் கூறியதாவது:
ஜனநாயகத்தின் அடித்தளமாக திகழ்பவா்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள்தான். அவா்களுடனான கலந்துரையாடலில் அவா்களது பணியில் உள்ள நடைமுறைகள், மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து அறியமுடிந்தது. அவா்களுடைய முக்கிய ஆலோசனைகள் மற்றும் தீா்வுகள் குறித்து முடிவெடுத்து நமது ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும்.
தமிழகத்தில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களைச் சரிபாா்த்து வாக்காளா் பட்டியல்களில் தகுதியான வாக்காளா்கள் இடம் பெறுவதையும், தவறுகள் இன்றி உறுதிப்படுத்தும் பணியையும் மேற்கொள்கின்றனா். அதன்படி, வாக்காளா்கள் பட்டியல் துல்லியமாகவும், தவறுகள் இன்றியும் பராமரிப்பதில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.