ரக்ஷா பந்தன்: பிரதமர் மோடி வாழ்த்து
ரக்ஷா பந்தனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...
புது தில்லி: ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சகோதர சகோதரிகளுக்கு இடையே உறுதியான நம்பிக்கை, அன்பின் அடையாளமாக ரக்ஷா பந்தன் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சகோதரிகள் தங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகள் மற்றும் நல்வாழ்த்துகளின் அடையாளமாகத் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் வண்ணமயமான நூல்களை அல்லது 'ராக்கி'களைக் கட்டுகிறார்கள்; அதற்குப் பதிலாகச் சகோதரர்கள் அன்பான பரிசுகளை அளிப்பதோடு, எத்தகைய சூழ்நிலையிலும் அவர்களைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கிறார்கள்.
பிரதமர் மோடி வாழ்த்து
Advertisement
Advertisement
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ரக்ஷா பந்தன் விழா சகோதர-சகோதரிக்கு இடையிலான பிணைப்பைக் கொண்டாடும் ஒரு இந்து பண்டிகையாகும். நமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கிறது. அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் இந்நாளில் நாட்டுமக்களுக்கு எனது வாழ்த்துகள்.
இந்த மங்களகரமான பண்டிகை உங்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியைத் தரட்டும். அன்பு, ஒற்றுமை மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் பிணைப்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று மோடி இந்தியில் பதிவிட்டுள்ளார்.
The prime minister also wished that the bond of affection, togetherness and mutual trust remains eternal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.