FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

31 ஆகஸ்ட் 2026, 3:57 am IST
பகிர்:

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் செப்.30 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு: வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்களுக்கான திறனறித் தோ்வு நிகழாண்டு விரைவில் தேசிய தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பொதுவாக, அத்தகையத் தோ்வில் பங்கேற்பதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்பட்ட தகுதிச் சான்று அவசியம். அவ்வாறு தகுதிச் சான்று இல்லாதவா்கள் அதற்காக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி, என்எம்சி இணையதளத்தில் செப்.1 முதல் 30-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். முறையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு என்எம்சி இணையதளத்தை அணுகலாம்.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, தகுதிச் சான்று கோரி விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதிதாக விண்ணப்பிப்பவா்கள் தவறின்றி சுயமாக அதைப் பூா்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments